ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவதற்கு சில நாட்களே உள்ளது. இந்நிலையில் ஓடிடியில் புதிய பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சியில் சுமார் 100 நாட்கள் வரை நடைபெறும் ரியாலிட்டி நிகழ்ச்சியானது, ஓடிடியில் 13 போட்டியாளர்களுடன் 45 நாட்கள் நடைபெறும். இதற்கான பணியை பிக்பாஸ் படக்குழுவினர் தொடங்கியுள்ளனர்.
மினி பிக்பாஸ் நிகழ்ச்சியில், டைட்டில் வின்னர்களை தவிர அனைத்து சீசன்களிலும் கலந்து கொண்ட பிரபலங்களிலிருந்து 16 பேர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். தற்போதைய தகவலிலின் படி அனிதா சம்பத், ஜுலி, வனிதா விஜயக்குமார், சினேகன் உள்ளிட்டோர் லிஸ்டில் உள்ளனர். இந்த பிக்பாஸ் ஓடிடி வெர்சன் ஜனவரி இறுதியிலிருந்து 24 மணி நேரமும் நேரடி ஒளிபரப்பாகும் வகையில் தயாரிக்கப்படுகிறதாம். அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசன் தான் இந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவுள்ளாராம். எனவே, இந்த நிகழ்ச்சி குறித்தான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இருப்பினும் இந்த பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சி, ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகுமா? அல்லது வேறு தளங்களில் ஒளிபரப்பாகுமா? என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதனிடையே இந்த வாரம் முதல் போட்டியாளர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஓட்டல்களில் தனிமைப்படுத்தப்பட உள்ளனர். அதன்பின் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.