இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இந்தியத் திரையுலகின் முக்கியமான இசையமைப்பாளர் இளையராஜா. தமிழில், “அலைகள் ஓய்வதில்லை, கோழி கூவுது, கொக்கரக்கோ, கீதாஞ்சலி, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, ராஜாதி ராஜா, சிங்காரவேலன்' உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.
பாவலர் கிரியேஷன்ஸ் என்ற அந்த நிறுவனம் சார்பில் திரைப்படங்களைத் தயாரித்து 30 ஆண்டு காலம் ஆகிவிட்டது. சமீப காலமாக இளையராஜாவும், ரஜினிகாந்தும் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ரஜினியிடம், தனது நிறுவனத்துக்காக ஒரு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று இளையராஜா கேட்டதாகவும் அதற்கு ரஜினி சம்மதம் சொன்னதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இளையராஜா மீது மிகுந்த அபிமானம் கொண்டு பாலிவுட் இயக்குனரான பால்கி, ரஜினியை சந்தித்து கதையைக் கூறியதாகவும், அந்தக் கதையும் ரஜினிக்கு பிடித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அப்படத்தை ஹிந்தியில் தயாரிக்கலாமா, தமிழில் தயாரிக்கலாமா என்று பேசப்பட்டு வருகிறதாம். விரைவில் அது பற்றி முடிவெடுக்கப்பட்டு அறிவிப்பு வரலாம் என்கிறார்கள்.