பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி |
நடிகை காஜல் அகர்வால் தனது பயண அனுபவங்களை புத்தகமாக எழுத முடிவு செய்துள்ளார். விஜய்யுடன் நடித்த துப்பாக்கி படம் வெற்றிகரமாக ஓடியதால் தனது சம்பளத்தை ரூ.1 கோடிக்கு மேல் உயர்த்தியிருக்கும் காஜல் அகர்வாலுக்கு இப்போது எழுத்து மீது ஆர்வம் வந்துள்ளது. ஏற்கனவே நடிகைகள் அனுஷ்கா, பூமிகா உள்ளிட்டோர் கவிதைகள் எழுதும் வழக்கம் உடையவர்கள். அந்த வரிசையில் காஜல் அகர்வால் பயணக்கட்டுரை எழுதப் போகிறார்.
இதுகுறித்து காஜல் கூறுகையில், நடிகை ஆனதால் உலக நாடுகளை சுற்றி விட்டேன். ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு மக்கள், கலாச்சாரம் சம்பவங்களை பார்த்து ரசித்துள்ளேன். அதையெல்லாம் புத்தகமாக எழுதப்போகிறேன். சில இடங்கள் சீரியஸ் ஆக இருக்கும். சில பகுதிகள் அமைதியாக இருக்கும். அங்கு எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் புத்தகத்தில் இருக்கும். சில நாடுகளின் மலை ஆறு, ஏரிகள் போன்ற இயற்கை அழகு என்னை மிகவும் கவர்ந்தன. அந்த உணர்வுகளையும் புத்தகத்தில் கொட்டப் போகிறேன். சினிமாவுக்கு வந்ததால்தான் உலக நாடுகளுக்கு போகும் வாய்ப்புகள் கிட்டியது. படப்பிடிப்புக்காக நிறைய நாடுகளை சுற்றி வந்து விட்டேன். எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதற்காகவே புத்தகம் எழுதுகிறேன், என்றார்.