பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் ஐந்து மொழிகளில் வெளியான படம் 'புஷ்பா'. இப்படத்தில் 'ஓ சொல்றியா மாமா…' என்ற ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனமாடியுள்ளார் சமந்தா. அப்பாடல் அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட்டாகி உள்ளது.
படத்தைப் பார்த்து சமந்தா கூறுகையில், “இது அல்லு அர்ஜுனைப் பாராட்டும் ஒரு பதிவு. ஒவ்வொரு நொடியும் உங்களை கவர்ந்திழுக்கும் ஒரு நடிப்பு. ஒரு நடிகர் எப்போதும் சிறப்பாக செயல்படும் போது அவரை விட்டு விலகிப் பார்ப்பது முடியாத ஒன்று. 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன் எனக்கு அப்படித்தான் தெரிகிறார். பேச்சு நடை, தோளை இறக்கி நடக்கும் நடை… அச்சோ... நிஜமாகவே பிரமிப்பு, மிவும் உத்வேகமான ஒன்று,” எனப் பாராட்டியுள்ளார்.
சமந்தாவின் பாராட்டிற்கு, “மனப்பூர்வமான பாராட்டுக்களுக்கு நன்றி டியர், தொட்டுவிட்டீர்கள்,” என அல்லு அர்ஜுன் நன்றி தெரிவித்துள்ளார்.