ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் நடித்த சிவகாசி, திருப்பாச்சி மற்றும் அஜீத் நடித்த திருப்பதி உள்பட பல படங்களை இயக்கியவர் பேரரசு. இவர் கடைசியாக இயக்கிய படம் திருத்தணி. பரத் நடித்துள்ள இப்படம் தோல்வி அடைந்ததால், அடுத்து யாரை வைத்து படம் இயக்குவது என்ற கேள்விக்குறியில் இருந்தார் பேரரசு. இந்த நிலையில், ஏதாவது பரபரப்பை உண்டு பண்ண வேண்டும் என்று நினைத்த அவர், ரஜினிக்கே என்னிடம் கதை உள்ளது. படத்திற்குகூட செங்கோட்டை என்று பெயர் வைத்திருக்கிறேன் என செய்தி வெளியிட்டு பரபரப்பு கூட்டினார்.
ஆனால் இந்த செய்தி ரஜினி வட்டாரத்துக்கு சென்றபோது, செம டென்சனாகி விட்டார்களாம். இவர் செங்கோட்டை, மலைக்கோட்டை என்று எந்த பெயரில் வேண்டுமானாலும் படமெடுக்கட்டும். எதற்காக ரஜினி பெயரை இழுக்கிறார் என்று கொதிப்படைந்திருக்கிறார்கள். இதையடுத்து ரஜினிதரப்பில் இருந்து ஒருவர், இந்த மாதிரி ரஜினி சார் பெயரை பயன்படுத்துவதை நிறுத்தி கொள்ளுங்கள் என்று பேரரசுவை தொடர்பு கொண்டு எச்சரித்துள்ளார்களாம். இதையடுத்து, இப்படியொரு செய்தி வெளியானது எனக்கேத் தெரியாது. நானும் மீடியாக்களில் பார்த்துதான் உங்களை மாதிரியே தெரிந்து கொண்டேன் என்று ஜகா வாங்கியிருக்கிறார் டைரக்டர்.