தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இசையமைப்பாளர், நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையோடு வலம் வருகிறார் ஜி.வி.பிரகாஷ். தமிழில் அதிக படங்களில் நடிக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். அதேசமயம் இசையிலும் பிஸியாக உள்ளார். ''இன்னொரு பாடலின் சாயல் வரும் போது, அதை மாற்றிக் கொள்வதில் தவறில்லை'' என, நடிகரும், இசை அமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் கூறினார். அவர் அளித்த சிறப்பு பேட்டி:
வெயில் பட இசையமைப்பாளர் ஜி.வி., நினைத்த இடத்திற்கு தற்போது வந்து விட்டாரா?
ஆரம்பிக்கும் போது கனவு நிறைய இருந்தது. இப்போதைக்கு 10 சதவீதம் வந்து விட்டேன் என நினைக்கிறேன்; இன்னும் 90 சதவீதம் இருக்கு.
ஒரு பாடலை கேட்கும் போது, அது வேறு ஒரு பாடலின் சாயலாக இருப்பதை தவிர்க்க என்ன செய்யலாம்?
நமக்கு தெரிந்தவர்களிடமோ அல்லது வேறு யாரிடமாவது கொடுத்து கேட்க வைக்கலாம். சாயல் இருந்தால் 'நோட்ஸ்' மாற்றிக் கொள்வதில் தவறில்லை.
-நமது நிருபர்-