'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வந்த வேகத்திலேயே சில நடிகைகள் மாநில விருது, தேசிய விருது என்று வாங்குவதைப்பார்த்து உள்ளுக்குள் குமுறிப்போய் இருக்கிறார் அனுஷ்கா. அதன் வெளிப்படாக, சும்மா மரத்தைச்சுற்றி டூயட் பாடும் நடிகைகளெல்லாம் தேசிய விருதுகளை சமீபகாலமாய் தட்டிச்செல்கிறார்கள். அதைப்பார்க்கையில், சவாலான வேடங்களில் நடிக்கும் எனக்கு படத்துக்குப்படம் விருது கொடுத்தால்கூட தகும். ஆனால் என்னை யாரும் கண்டு கொள்ளாததுதான் வேதனையாக உள்ளது என்கிறார் அனுஷ்கா.
மேலும், இப்போது தான் இரண்டாம் உலகம் படத்தில் மிக வித்தியாசமான இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லும் அனுஷ்கா, இந்த படத்தில் எனக்கு விருது கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதற்கு கிடைக்காவிட்டால் நான் விருது கமிட்டி மீதே போர் தொடுப்பேன் என்றும் ஆவேசத்துடன் சொல்கிறார். அதற்காக, இதுவரை எந்த தமிழ் படத்திலும் சொந்த குரலில் டப்பிங் பேசாத அனுஷ்கா, இப்போது முதன்முறையாக இரண்டாம் உலகம் படத்தில் பேசுவதற்காக தமிழை மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறார்.