‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
வந்த வேகத்திலேயே சில நடிகைகள் மாநில விருது, தேசிய விருது என்று வாங்குவதைப்பார்த்து உள்ளுக்குள் குமுறிப்போய் இருக்கிறார் அனுஷ்கா. அதன் வெளிப்படாக, சும்மா மரத்தைச்சுற்றி டூயட் பாடும் நடிகைகளெல்லாம் தேசிய விருதுகளை சமீபகாலமாய் தட்டிச்செல்கிறார்கள். அதைப்பார்க்கையில், சவாலான வேடங்களில் நடிக்கும் எனக்கு படத்துக்குப்படம் விருது கொடுத்தால்கூட தகும். ஆனால் என்னை யாரும் கண்டு கொள்ளாததுதான் வேதனையாக உள்ளது என்கிறார் அனுஷ்கா.
மேலும், இப்போது தான் இரண்டாம் உலகம் படத்தில் மிக வித்தியாசமான இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லும் அனுஷ்கா, இந்த படத்தில் எனக்கு விருது கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதற்கு கிடைக்காவிட்டால் நான் விருது கமிட்டி மீதே போர் தொடுப்பேன் என்றும் ஆவேசத்துடன் சொல்கிறார். அதற்காக, இதுவரை எந்த தமிழ் படத்திலும் சொந்த குரலில் டப்பிங் பேசாத அனுஷ்கா, இப்போது முதன்முறையாக இரண்டாம் உலகம் படத்தில் பேசுவதற்காக தமிழை மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறார்.