தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வந்த வேகத்திலேயே சில நடிகைகள் மாநில விருது, தேசிய விருது என்று வாங்குவதைப்பார்த்து உள்ளுக்குள் குமுறிப்போய் இருக்கிறார் அனுஷ்கா. அதன் வெளிப்படாக, சும்மா மரத்தைச்சுற்றி டூயட் பாடும் நடிகைகளெல்லாம் தேசிய விருதுகளை சமீபகாலமாய் தட்டிச்செல்கிறார்கள். அதைப்பார்க்கையில், சவாலான வேடங்களில் நடிக்கும் எனக்கு படத்துக்குப்படம் விருது கொடுத்தால்கூட தகும். ஆனால் என்னை யாரும் கண்டு கொள்ளாததுதான் வேதனையாக உள்ளது என்கிறார் அனுஷ்கா.
மேலும், இப்போது தான் இரண்டாம் உலகம் படத்தில் மிக வித்தியாசமான இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லும் அனுஷ்கா, இந்த படத்தில் எனக்கு விருது கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதற்கு கிடைக்காவிட்டால் நான் விருது கமிட்டி மீதே போர் தொடுப்பேன் என்றும் ஆவேசத்துடன் சொல்கிறார். அதற்காக, இதுவரை எந்த தமிழ் படத்திலும் சொந்த குரலில் டப்பிங் பேசாத அனுஷ்கா, இப்போது முதன்முறையாக இரண்டாம் உலகம் படத்தில் பேசுவதற்காக தமிழை மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறார்.