ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
முன்வரிசை ஹீரோக்களுக்கு ஜோடியாகும்போதுதான் நடிகைகளின் ரேஞ்ச் எகிறும். அதோடு அதுவரை டல்லடித்த அவர்களின் மார்க்கெட் மற்றும் படக்கூலியும் கிடுகிடுவென உயரும். ஆனால் அமலாபாலோ, என்னைப்பொறுத்தவரை ஹீரோக்களை நம்பி நானில்லை. அவர்களை எப்போதுமே இரண்டாம்பட்சமாகத்தான் நினைக்கிறேன் என்கிறார்.
இதுபற்றி அவர் விரிவாக கூறும்போது, சாதாரணமாக ஒரு படம் உருவாவதற்கு தயாரிப்பாளர் பணம் போடுகிறார் என்றால், அந்த படத்தின் முக்கிய மூளையாக இருந்து படத்தை உருவாக்குபவர் இயக்குனர்தான். அவரது கதையும், இயக்கமும் சரியாக இருந்தால் மட்டுமே படம் ஓடும். அப்படி அவர்கள் ஹிட் படம் கொடுக்கிறபோதுதான் அதில் நடித்த நடிகர்-நடிகைகள் பேசப்படுவார்கள். ஆக, நல்ல கதை நல்ல இயக்குனர் என்ற அடிப்படையில்தான் படங்களை ஓ.கே செய்கிறேன். ஆனால் ஹீரோக்களை மனதில் கொண்டு எந்தவொரு படத்தையும் ஓ.கே செய்வதில்லை. அவர்களை எப்போதுமே இரண்டாம்பட்சமாகத்தான் நான் நினைக்கிறேன் என்கிறார் அமலாபால்.