பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
முன்வரிசை ஹீரோக்களுக்கு ஜோடியாகும்போதுதான் நடிகைகளின் ரேஞ்ச் எகிறும். அதோடு அதுவரை டல்லடித்த அவர்களின் மார்க்கெட் மற்றும் படக்கூலியும் கிடுகிடுவென உயரும். ஆனால் அமலாபாலோ, என்னைப்பொறுத்தவரை ஹீரோக்களை நம்பி நானில்லை. அவர்களை எப்போதுமே இரண்டாம்பட்சமாகத்தான் நினைக்கிறேன் என்கிறார்.
இதுபற்றி அவர் விரிவாக கூறும்போது, சாதாரணமாக ஒரு படம் உருவாவதற்கு தயாரிப்பாளர் பணம் போடுகிறார் என்றால், அந்த படத்தின் முக்கிய மூளையாக இருந்து படத்தை உருவாக்குபவர் இயக்குனர்தான். அவரது கதையும், இயக்கமும் சரியாக இருந்தால் மட்டுமே படம் ஓடும். அப்படி அவர்கள் ஹிட் படம் கொடுக்கிறபோதுதான் அதில் நடித்த நடிகர்-நடிகைகள் பேசப்படுவார்கள். ஆக, நல்ல கதை நல்ல இயக்குனர் என்ற அடிப்படையில்தான் படங்களை ஓ.கே செய்கிறேன். ஆனால் ஹீரோக்களை மனதில் கொண்டு எந்தவொரு படத்தையும் ஓ.கே செய்வதில்லை. அவர்களை எப்போதுமே இரண்டாம்பட்சமாகத்தான் நான் நினைக்கிறேன் என்கிறார் அமலாபால்.