'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
தமிழ் சினிமாவின் தலைவிதிப்படி காமெடியாக நடிப்பவர்கள் ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடித்துதானே ஆக வேண்டும். அந்த வரிசையில இப்போது சேர்ந்திருக்கிறார் தம்பி ராமையா.
வடிவேலுவின் காமெடி டீமில் ரைட்டரா இருந்து நடிகராக மாறியவர் தம்பி ராமையா. வடிவேலுக்கு பல படங்களில் காமெடி எழுதியவர். இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி பெரிய வெற்றி பெற்றதும். தம்பி ராமையா அதேபோன்ற ஒரு கதையை தயார் செய்தார். அதுதான் இந்திரலோகத்தில் நா.அழகப்பன். அதற்கு ஒரு தயாரிப்பாளர் பிடித்து தருமாறு இவர் வடிவேலுவிடம் கேட்க செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் சிக்கினார். 14 கோடி பட்ஜெட்டில் இந்திரலோகத்தில் நா.அழப்பன் படத்தை இயக்கினார் தம்பி ராமையா. வடிவேலு ஸ்ரேயாவுடனெல்லாம் ஆட்டம் போட்டு தன் ஆசையை தீர்த்துக் கொண்டார். தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டம். படம் அட்டர் ஃபிளாப் ஆனதால் வடிவேலுவும் தம்பி ராமையாவை கழற்றி விட்டுவிட்டார். அதன் பிறகு சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்த தம்பி ராமையா "ஒரு கூடை முத்தம்" என்ற படத்தை இயக்கி வருவதாக திடீரென அறிவித்தார். இதற்கிடையில் அடிக்கடி பிரபு சாலமன் அலுவலுகத்திற்கு சென்று அங்கு அவருக்கு "கம்பெனி" கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த பழக்கத்தில் அவருக்கு மைனா வாய்ப்புக் கிடைத்து. திடீர் அதிர்ஷ்டம் அவரை தேசிய விருது வரை கொண்டு நிறுத்தியது. நடிப்புங்றது நோகாம நொங்கு தின்கிற வேலை என்பதை உணர்ந்த தம்பி ராமையா, தான் இயக்க ஆரம்பித்த ஒரு கூடை முத்தம் படத்தை அப்படியே விட்டுவிட்டு முழுநேர நடிகராகிவிட்டார். தினசரி லட்சக் கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர் ஆனார். இதுதான் தம்பி ராமையாவின் பிளாஷ் பேக். இப்போது அவர் ஹீரோவான கதைக்கு வருவோம்.
திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இணைந்து தயாரிக்கும் படம் "உ". இதில் தம்பி ராமையா ஹீரோவாக நடிக்கிறார். நல்ல வேளை ஹீரோயின் கிடையாது. கதைப்படி அவருக்கு ஒரு பெரிய வேலை வருகிறது. அந்த வேலையை செய்து முடித்தால் அவர் கோடீஸ்வரனாகலாம். ஆனால் அதை அவர் ஒருவரால் மட்டுமே செய்ய முடியாது. அதனால் நான்கைந்து இளைஞர்களை சேர்த்துக் கொண்டு அந்த வேலையைச் செய்கிறார். கோடிகள் கொட்டும் வேலை என்பதால் இளைஞர்கள் தம்பி ராமையாவை ஏமாற்றிவிட்டு அந்தப் பணத்தை இவர்கள் எடுத்துக் கொள்ள நினைக்கிறார்கள். யார் வெற்றி பெற்றார்கள் என்பதுடன் முடியும் கதை. ஆஷிக் இயக்குகிறார், அபிஜித் ராமசாமி இசை அமைக்கிறார். ஜெயபிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். கமல்குமார் எடிட் செய்கிறார். இவர்கள் அனைவரும் திரைப்படக் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள் ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு படத்தை இயக்குகிறார்கள்.
ஹீரோவா நடிங்க சார்... வாழ்க்கை நல்லா இருக்கும்...