ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா தற்போது 'புஷ்பா' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இப்பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இதனிடையே, சமந்தாவிற்கு உடல்நிலை சரியில்லை என இரண்டு நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பரவியது. லேசான இருமலுக்காக மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து கொண்டார் சமந்தா. அதை வைத்து வதந்தியைக் கிளப்பி விட்டார்கள். அதன்பின் சமந்தாவின் மானேஜர் அந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என விளக்கம் கொடுத்தார்.
நேற்று இரவு சமந்தா ஒரு செல்பி புகைப்படத்தைப் பதிவிட்டு, “நாள் முழுவதும் தூங்கினேன், இப்போது இரவு 9 மணிக்குதான் எழுந்தேன்” எனப் பதிவிட்டு தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். தொடர்ந்து சமூகவலைதளத்தில் சில பதிவுகளையும் பதிவிட்டுள்ளார்.