‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நடிகையும், ஆந்திர மாநில எம்எல்ஏ.,வான ரோஜா நேற்று ராஜமுந்திரியில் இருந்து திருப்பதிக்கு தனியார் விமானத்தில் பயணம் செய்தார். அவருடன் சுமார் 70 பயணிகள் அந்த விமானத்தில் பயணித்துள்ளனர். திருப்பதி விமான நிலையத்தை அடைந்தபோது, விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விமானத்தை பெங்களுருவை நோக்கித் திருப்பி பெங்களூரில் தரையிறக்கியுள்ளனர்.
இதுகுறித்து ரோஜா வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: ராஜமுந்திரியில் இருந்து திருப்பதிக்கு விமானத்தில் பயணித்தேன். தரையிறங்கும் சமயத்தில் திடீரென மேகமூட்டம் இருப்பதாக சொன்னார்கள். போதிய பெட்ரோல் இல்லை என்றார்கள், பின்னர் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக மாறி மாறி அறிவித்தார்கள்.
பெங்களூரு விமான நிலையத்தில் நாங்கள் சுமார் 4 மணி நேரமாக விமானத்திற்கு உள்ளேயே காத்திருக்கிறோம். எங்களை வெளியே செல்ல அனுமதிக்க மறுத்தார்கள். சமீபத்தில் செய்துகொண்ட அறுவை சிகிச்சை காரணமாக விமானத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் வலி அதிகமாக உள்ளதாகக் கூறி வெளியே செல்ல அனுமதி கேட்டும் மறுத்தனர். மேலும், விமானத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்க 5 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்று கூறினர். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக முடிவு செய்திருக்கிறேன். எனத் தெரிவித்துள்ளார்.