கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
தீண்ட தீண்ட என்ற படத்தை இயக்கிய ஏ.பி.முகன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரித்து இயக்கும் படம் விடியும் வரை பேசு. அனித் ஹீரோவாகவும், நன்மா, வைதேகி ஹீரோயினாகவும் அறிமுகமாகிறார்கள். மிஸ்டுகாலால் ஏற்படும் பிரச்சினைகளைச் சொல்லும் படமாம். அதுபற்றி இயக்குனர் முகன் கூறியதாவது: செல்போனை கண்டுபிடித்தவன் வெள்ளைக்காரன். மிஸ்டுகாலை கண்டுபிடித்தவன் தமிழன். கிராமத்திலிருந்து சென்னைக்கு ஐ.டி கம்பெனிக்கு வேலைக்கு வரும் இளைஞனுக்கு ஒரு மிஸ்டுகால் வருகிறது. அதில் பேசினால் ஒரு இளம் பெண் பேசுகிறாள். பார்த்துக்கொள்ளாமலே இருவரும் பேசிக் கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவள் பேச்சை கேட்ககாவிட்டால் இவனுக்கு பைத்தியம் பிடித்தமாதிரி ஆகிறது. இப்படிப்போகும் கதையில் கடைசியில் என்னாகிறது என்பது கிளைமாக்ஸ். இன்றைக்கு பாதி பாலியல் தவறுகளுக்கு காரணம் பெண்கள் என்றால் செல்போன். ஆண்கள் என்றால் மது இதை ஆணித்தரமாக சொல்கிறோம். படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. பிப்ரவரி மாதம் ரிலீஸ் என்கிறார்.