இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தீண்ட தீண்ட என்ற படத்தை இயக்கிய ஏ.பி.முகன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரித்து இயக்கும் படம் விடியும் வரை பேசு. அனித் ஹீரோவாகவும், நன்மா, வைதேகி ஹீரோயினாகவும் அறிமுகமாகிறார்கள். மிஸ்டுகாலால் ஏற்படும் பிரச்சினைகளைச் சொல்லும் படமாம். அதுபற்றி இயக்குனர் முகன் கூறியதாவது: செல்போனை கண்டுபிடித்தவன் வெள்ளைக்காரன். மிஸ்டுகாலை கண்டுபிடித்தவன் தமிழன். கிராமத்திலிருந்து சென்னைக்கு ஐ.டி கம்பெனிக்கு வேலைக்கு வரும் இளைஞனுக்கு ஒரு மிஸ்டுகால் வருகிறது. அதில் பேசினால் ஒரு இளம் பெண் பேசுகிறாள். பார்த்துக்கொள்ளாமலே இருவரும் பேசிக் கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவள் பேச்சை கேட்ககாவிட்டால் இவனுக்கு பைத்தியம் பிடித்தமாதிரி ஆகிறது. இப்படிப்போகும் கதையில் கடைசியில் என்னாகிறது என்பது கிளைமாக்ஸ். இன்றைக்கு பாதி பாலியல் தவறுகளுக்கு காரணம் பெண்கள் என்றால் செல்போன். ஆண்கள் என்றால் மது இதை ஆணித்தரமாக சொல்கிறோம். படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. பிப்ரவரி மாதம் ரிலீஸ் என்கிறார்.