நஸ்ரியாநசீமுக்கு தமிழ் வசனங்களை புரிய வைத்த ஜெய்! | சீரியலிலும் புரட்சி செய்யப்போகிறார் பாரதிராஜா! | துணிக்கடை தொடங்கிய டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா தம்பதி! | அசைவம் பிடிக்காத அசைவ நடிகை வித்யாபாலன்! | சித்தார்த்துக்காக மெனக்கெட்ட சந்தானம்! | கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் கெளதம்! | மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்! | நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்! | சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் |

தீண்ட தீண்ட என்ற படத்தை இயக்கிய ஏ.பி.முகன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரித்து இயக்கும் படம் விடியும் வரை பேசு. அனித் ஹீரோவாகவும், நன்மா, வைதேகி ஹீரோயினாகவும் அறிமுகமாகிறார்கள். மிஸ்டுகாலால் ஏற்படும் பிரச்சினைகளைச் சொல்லும் படமாம். அதுபற்றி இயக்குனர் முகன் கூறியதாவது: செல்போனை கண்டுபிடித்தவன் வெள்ளைக்காரன். மிஸ்டுகாலை கண்டுபிடித்தவன் தமிழன். கிராமத்திலிருந்து சென்னைக்கு ஐ.டி கம்பெனிக்கு வேலைக்கு வரும் இளைஞனுக்கு ஒரு மிஸ்டுகால் வருகிறது. அதில் பேசினால் ஒரு இளம் பெண் பேசுகிறாள். பார்த்துக்கொள்ளாமலே இருவரும் பேசிக் கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவள் பேச்சை கேட்ககாவிட்டால் இவனுக்கு பைத்தியம் பிடித்தமாதிரி ஆகிறது. இப்படிப்போகும் கதையில் கடைசியில் என்னாகிறது என்பது கிளைமாக்ஸ். இன்றைக்கு பாதி பாலியல் தவறுகளுக்கு காரணம் பெண்கள் என்றால் செல்போன். ஆண்கள் என்றால் மது இதை ஆணித்தரமாக சொல்கிறோம். படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. பிப்ரவரி மாதம் ரிலீஸ் என்கிறார்.