ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
தெலுங்கு நடிகரான பிரபாஸ் 'பாகுபலி' படங்களுக்குப் பிறகு பான் - இந்தியா நடிகராக மாறிவிட்டார். அவர் தற்போது 'மகாநடி' இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் அதன் கதாநாயகியான பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்தால் பிரபாஸ் தன்னுடன் நடிக்கும் கதாநாயகிகளுக்கு சிறப்பான உணவு அளித்து விருந்தோம்பல் செய்வார். இதற்கு முன்பு 'சலார்' படத்தின் போதும் பிரபாஸ் அளித்த உணவு பற்றி ஸ்ருதிஹாசன் பதிவிட்டிருந்தார்.
இப்போது தீபிகா படுகோனே அது குறித்து பதிவிட்டுள்ளார். ஆந்திரா, ஐதராபாத் உணவு வகைகளுடன் உள்ள புகைப்படத்தைப் பகிர்ந்து “உங்களுக்குத் தெரிந்தால் உங்களுக்குத் தெரியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது 'பிராஜக்ட் கே' என அழைக்கப்படும் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.