டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் வானத்தை போல. ஆரம்பத்தில் சற்று சறுக்கிய இந்த தொடர் அண்ணன் தங்கை பாசமலர் பார்முலாவில் சமீப காலங்களில் தூள் கிளப்பி வந்தது. இந்த சீரியலின் கதாநாயகியாக தங்கச்சி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஸ்வேதா கெல்கே. தமிழ் சின்னத்திரையில் வானத்தைப் போல சீரியலில் நடித்த பிறகு ஸ்வேதாவுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது . சீரியலும் டாப் கியரில் சென்று கொண்டிருக்க, திடீரென ஸ்வேதா சீரியலை விட்டு விலகியதாக தகவல்கள் வெளியானது.
இதனை தொடர்ந்து சில மணி நேரத்திலேயே ஸ்வேதா, 'நான் சீரியலை விட்டு விலகுவது உண்மை தான். நேற்று முன்தினம் (சனிக்கிழமை, டிசம்பர் 11) நான் துளசியாக நடிப்பது முடிவுக்கு வருகிறது' என்று தெரிவித்துள்ளார்.
ஸ்வேதாவுக்கு பதிலாக இனி துளசியாக ஜெமினி டிவியின் பிரபல சீரியல் நடிகையான 'மான்யா' நடிக்கவுள்ளதாக தெரிய வருகிறது.