ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சீனுராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. அதனால் அடுத்த படத்தையும் சிறப்பாக இயக்க வேண்டும் என்று நீர்ப்பறவையை இயக்கினார். படம் தயாராகிக்கொண்டிருக்கும்போதே இந்த படத்துக்கும் கண்டிப்பாக விருது கிடைக்கும் என்றும் கூறிவந்தார். அதனால் படம் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்தது. ஆனால் பெரிய அளவில வெற்றி பெறவில்லை என்றபோதும், பரவாயில்லை ரகமாகி, ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், சென்னையில் நடந்து முடிந்த சர்வதேச திரைப்பட விழாவில் தனது படத்துக்கும் விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தாராம் சீனுராமசாமி. ஆனால் ஒரு விருதுகூட கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து தான் தமிழ் சினிமாவை விட்டு விலகப்போவதாக தனது பேஸ்புக்கில் தெரிவித்திருக்கிறார் சீனுராமசாமி. இந்த செய்தி கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.