இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சீனுராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. அதனால் அடுத்த படத்தையும் சிறப்பாக இயக்க வேண்டும் என்று நீர்ப்பறவையை இயக்கினார். படம் தயாராகிக்கொண்டிருக்கும்போதே இந்த படத்துக்கும் கண்டிப்பாக விருது கிடைக்கும் என்றும் கூறிவந்தார். அதனால் படம் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்தது. ஆனால் பெரிய அளவில வெற்றி பெறவில்லை என்றபோதும், பரவாயில்லை ரகமாகி, ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், சென்னையில் நடந்து முடிந்த சர்வதேச திரைப்பட விழாவில் தனது படத்துக்கும் விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தாராம் சீனுராமசாமி. ஆனால் ஒரு விருதுகூட கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து தான் தமிழ் சினிமாவை விட்டு விலகப்போவதாக தனது பேஸ்புக்கில் தெரிவித்திருக்கிறார் சீனுராமசாமி. இந்த செய்தி கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.