ஷார்மியின் 12 வருடகலை சாதனை | "இந்தியில் நடிக்க நேரமில்லை | ஒரே படத்தில் மூன்று சரவெடி | சகுனம் பார்க்கும் வித்யா பாலன் | நான் கொஞ்சம் விவரமான பொண்ணுங்க...! அட்டகத்தி நந்திதா | "நவ் யு சி மீ | ஆசை ஆசை, அஜீத், விஜய் ஜோடியாக நடிக்க ஆசை! - ரம்யா நம்பீசன் | எனக்கு வீழ்ச்சி அல்ல, வளர்ச்சிதான்! - த்ரிஷா | இயக்குனராகிறார் மாஜி ஹீரோயின் ஸ்ரீப்ரியா! | நயன்தாராவும், டாப்சியும் ரொம்ப குளோஸ் |
சீனுராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. அதனால் அடுத்த படத்தையும் சிறப்பாக இயக்க வேண்டும் என்று நீர்ப்பறவையை இயக்கினார். படம் தயாராகிக்கொண்டிருக்கும்போதே இந்த படத்துக்கும் கண்டிப்பாக விருது கிடைக்கும் என்றும் கூறிவந்தார். அதனால் படம் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்தது. ஆனால் பெரிய அளவில வெற்றி பெறவில்லை என்றபோதும், பரவாயில்லை ரகமாகி, ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், சென்னையில் நடந்து முடிந்த சர்வதேச திரைப்பட விழாவில் தனது படத்துக்கும் விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தாராம் சீனுராமசாமி. ஆனால் ஒரு விருதுகூட கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து தான் தமிழ் சினிமாவை விட்டு விலகப்போவதாக தனது பேஸ்புக்கில் தெரிவித்திருக்கிறார் சீனுராமசாமி. இந்த செய்தி கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.