பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? |
சீனுராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. அதனால் அடுத்த படத்தையும் சிறப்பாக இயக்க வேண்டும் என்று நீர்ப்பறவையை இயக்கினார். படம் தயாராகிக்கொண்டிருக்கும்போதே இந்த படத்துக்கும் கண்டிப்பாக விருது கிடைக்கும் என்றும் கூறிவந்தார். அதனால் படம் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்தது. ஆனால் பெரிய அளவில வெற்றி பெறவில்லை என்றபோதும், பரவாயில்லை ரகமாகி, ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், சென்னையில் நடந்து முடிந்த சர்வதேச திரைப்பட விழாவில் தனது படத்துக்கும் விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தாராம் சீனுராமசாமி. ஆனால் ஒரு விருதுகூட கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து தான் தமிழ் சினிமாவை விட்டு விலகப்போவதாக தனது பேஸ்புக்கில் தெரிவித்திருக்கிறார் சீனுராமசாமி. இந்த செய்தி கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.