'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
பாடலாசிரியர் நா.முத்துகுமார் கடந்த ஆண்டு 103 பாடல்கள் எழுதி பாடல் உலகில் செஞ்சுரி அடித்துள்ளார். கவியரசர் கண்ணதாசன் தொடங்கி இன்றுவரை இதுவரை யாரும் செய்திராத மிகப்பெரிய சாதனை இது. இந்த ஆண்டு 34 படங்களில் 103 பாடல்களை எழுதியிருக்கிறார். இதில் ஒரு கல் ஒரு கண்ணாடி, வேட்டை, நீதானே என் பொன் வசந்தம், டோனி, பில்லா 2, தாண்டவம், விண்மீன்கள், படம் பார்த்து கதை சொல், அம்புலி ஆகிய படங்களின் முழு பாடல்களையும் நா.முவே எழுதியுள்ளார். அந்த வகையிலும் சாதனை படைத்துள்ளார்.
அவர் எழுதிய 103 பாடல்களில் 40 பாடல்கள் ஹிட்டாகி உள்ளன. குறிப்பாக நீதானே என் பொன் வசந்தம், ஒரு கல் ஒரு கண்ணாடி, வேட்டை, தாண்டவம், துப்பாக்கி, வழக்கு எண் 18/9, நண்பன் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. தற்போது 83 படங்களுக்கு பாடல்கள் எழுதி வருகிறார். அதுவும் சாதனையே.
மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் நா.முத்துகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.