அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
ஊர் பெயரிலேய படம் எடுத்து பெரிய அரசரானவர் அந்த இயக்குனர். சூப்பர் டூப் ஹிட்டெல்லாம் கொடுத்தவர். திடீரென அவர் பாணி அடிதடி படம் போரடிக்க வாய்ப்புகள் குறைந்தது. வேறு பாணியில் படம் எடுக்கவும் அவருக்குத் தெரியவில்லை. இதனால் புதிய படம் வரவில்லை. இருந்தாலும் அவர் தன் பாணி மீது அதீத நம்பிக்கை வைத்து சின்னத்தளபதியை வைத்து சென்னை பக்கத்தில் உள்ள முருகனின் அறுபடை வீட்டு ஸ்தலத்தின் பெயரில் ஒரு படம் எடுத்தார். அந்தப் படத்தின் தாயாரிப்பாளர் பாதியில் விலகிக் கொள்ள பெரிய அரசுவே கந்து வட்டிக்கு கடன் வாங்கி படத்தை முடித்து வெளியிட்டார். எப்படியும் போட்ட பணம் வந்துவிடும் என்று நம்பினார். நம்பிக்கை வீண்போனது. படம் நாலு நாளைத் தாண்டவில்லை. கோடிக் கணக்கில் நஷ்டம். தற்போது இயக்குனர் கடனை அடைக்க முடியாமலும், புதிய பட வாய்ப்பு இல்லாமலும் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார். யாராவது வாய்ப்புக் கொடுத்து அவரது சம்பளத்தை முன்னதாகவே கொடுத்தால் கூட பாதி கடனைத்தான் அடைக்க முடியுமாம்.