இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை |
திருப்பூரில் பனியன், ஜட்டி தயாரிக்கும் தொழிற்சாலை வைத்திருக்கும் கோவல் சுவாமிநாதன் தயாரிக்கும் படம் புதுமுகங்கள் தேவை. சிவாஜிதேவ், பானு, ராஜேஷ் யாதவ் நடிக்கிறார்கள். மனீஷ் பாபு இயக்குகிறார். இந்தப் படம் சினிமாவை கிண்டல் செய்து எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இயக்குனர் மனீஷ்பாபு அளித்த விளக்கம்.
ஒரு புதுமுக தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்கள் இணைந்து ஒரு உப்புமா படம் தயாரித்தால் எப்படி இருக்கும் என்பதை காமெடியாகச் சொல்லும் படம். சினிமாவில் உள்ள சில கசப்பான விஷயங்களை காமெடியாகச் சொல்கிறோம். மற்றபடி சினிமாவையே தனிப்பட்ட யாரையுமோ கிண்டல் செய்து எடுக்கவில்லை. இதில் பானு ஒரு நடிகையாகவே வருகிறார். பந்தா பண்ணும் நடிகைகளை அப்படியே பிரதிபலிப்பார். சினிமாவில் மட்டும் காமெடியில்லை. சினிமா தயாரிப்பதும் கமெடிதான். படம் பாருங்கள் அது தெரியும் என்கிறார். மனீஷ் பாபு.