சிங்கம்-2 ஆடியோ விழாவில் மேலும் மூன்று சிங்கங்கள்! | அஜீத், சூர்யா படங்களுக்கு ரூட் விடும் அமலாபால்! | பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே |
திருப்பூரில் பனியன், ஜட்டி தயாரிக்கும் தொழிற்சாலை வைத்திருக்கும் கோவல் சுவாமிநாதன் தயாரிக்கும் படம் புதுமுகங்கள் தேவை. சிவாஜிதேவ், பானு, ராஜேஷ் யாதவ் நடிக்கிறார்கள். மனீஷ் பாபு இயக்குகிறார். இந்தப் படம் சினிமாவை கிண்டல் செய்து எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இயக்குனர் மனீஷ்பாபு அளித்த விளக்கம்.
ஒரு புதுமுக தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்கள் இணைந்து ஒரு உப்புமா படம் தயாரித்தால் எப்படி இருக்கும் என்பதை காமெடியாகச் சொல்லும் படம். சினிமாவில் உள்ள சில கசப்பான விஷயங்களை காமெடியாகச் சொல்கிறோம். மற்றபடி சினிமாவையே தனிப்பட்ட யாரையுமோ கிண்டல் செய்து எடுக்கவில்லை. இதில் பானு ஒரு நடிகையாகவே வருகிறார். பந்தா பண்ணும் நடிகைகளை அப்படியே பிரதிபலிப்பார். சினிமாவில் மட்டும் காமெடியில்லை. சினிமா தயாரிப்பதும் கமெடிதான். படம் பாருங்கள் அது தெரியும் என்கிறார். மனீஷ் பாபு.