வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தமிழில் எத்தனையோ படங்களில் நடித்திருந்தபோதும் நீர்ப்பறவைதான் சுனைனாவை ஒரு நல்ல நடிகையாக அடையாளம் காட்டியது. அதனால் அந்த படத்துக்குப்பிறகு கோடம்பாக்கத்தில் நாமும் முன்னணி நடிகையாகி விடுவோம் என்று மனசு நிறைய நம்பிக்கை வைத்திருந்தார் அவர். அதனால் படம் திரைக்கு வந்தபிறகு முன்னணி இயக்குனர்கள் வீட்டுக்கதவை தட்டுவார்கள் என்றும் ஆவலுடன் இருந்தார். ஆனால் இதுவரை புதிய படம் விசயமாக ஒருவர்கூட அவர் வீட்டுப்பக்கம் தலைகாட்டவில்லையாம்.
இதனால் பலத்த ஏமாற்றம் அடைந்திருக்கிறார் சுனைனா. அதோடு இதுவரை திறமையான நடிகைகளுக்கு கோலிவுட்டில் மரியாதை கிடைக்கும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அதற்கேற்ற வாய்ப்பு கிடைத்து நடிப்பில் முத்திரை பதித்தபோதும் ஒரு படம் கூட கிடைக்காதது வேதனையாக உள்ளது என்று கூறி வருகிறார். மேலும், இவர்களைப்பொறுத்தவரை நடிகைகள் திறமையை வெளிப்படுத்துவதை விட, உடம்பை வெளிப்படுத்தி நடித்தால்தான் மதிப்பார்கள் போல் தெரிகிறது. அதனால் இனி நானும் ஊரோடு ஒத்துப்போகப்போகிறேன். அதிரடி கிளாமர் படங்களாக செலக்ட் பண்ணி நடித்து பணம் சம்பாதிக்கப்போகிறேன் என்றும் வெறுப்புடன் பேசுகிறார் சுனைனா.