வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
கமலுக்கு தேசிய விருது வாங்கி கொடுத்த மூன்றாம் பிறை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும், அதில் மீண்டும் கமல்-ஸ்ரீதேவியை நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல்-ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா உள்ளிட்டோர் நடிப்பில் 1982ம் ஆண்டு வெளியான படம் மூன்றாம் பிறை. இப்படத்தில் ஆசிரியராக கமலும், ஒரு விபத்தில் பழைய நினைவுகளை மறந்து மனநிலை பாதித்த பெண்ணாக ஸ்ரீதேவியும் நடித்து இருந்தனர். அழகான காதல் கதையை சொல்லி இருந்தார் பாலு மகேந்திரா. இப்படத்தின் க்ளைமாக்ஸ் அனைவரையும் வியக்க வைத்தது. படத்திற்கு இளையராஜாவின் இசையும் பெரிதும் பேசப்பட்டது. அதுமட்டுமின்றி இப்படத்திற்காக கமலுக்கு தேசிய விருதும் கிடைத்தது. மேலும் இப்படம் இந்தியிலும் ரீ-மேக் செய்யப்பட்டு அங்கும் ஹிட்டானது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தற்போது முயற்சிகள் நடந்து வருகிறது. இதில் மீண்டும் கமல், ஸ்ரீதேவி ஆகியோரையே நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று கருதி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.