டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகை நயன்தாரா பிறப்பால் ஒரு கிறிஸ்தவ பெண். அதனால் என்னதான் படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும் தேவாலயங்களுக்கு சென்று பிரேயர் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இருப்பினும் பிரபுதேவாவுடனான காதலுக்குப்பிறகு, அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக தன்னை முழுசாக மாற்றிக்கொண்டு ஒரு இந்து பெண்ணாகவே மாறினார். திருப்பதி போன்ற முக்கிய கோயில்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து வந்தார். இதையடுத்து சில கிறிஸ்தவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தும், என் சொந்த விசயத்தில் தலையிட மதவாதிகளுக்கு அனுமதியில்லை என்று காரசாரமாக அறிவித்து அவர்களின் வாயடைத்தார்.
ஆனால் அந்த அளவுக்கு பிரபுதேவா விசயத்தில் தீவிரமாக இருந்த நயன்தாரா, பிரபுதேவாவுடனான உறவு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து மீண்டும் தன்னை கிறிஸ்தவ மதத்திலேயே இணைத்துக்கொண்டார். இதற்காக அவர் கேரளாவில் உள்ள ஒரு சர்ச்சிக்கு சென்று சில மாதங்களுக்கு முன்பே பாவ மன்னிப்பு கோரியதாகவும கூறப்படுகிறது. மேலும், நேற்று கிறிஸ்மஸ் தினத்தையொட்டி வழக்கம்போல் தனது குடும்பத்தினருடன் இணைந்து துபாயில் கிறிஸ்துமஸ் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் நயன்தாரா.