'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
நடிகை நயன்தாரா பிறப்பால் ஒரு கிறிஸ்தவ பெண். அதனால் என்னதான் படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும் தேவாலயங்களுக்கு சென்று பிரேயர் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இருப்பினும் பிரபுதேவாவுடனான காதலுக்குப்பிறகு, அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக தன்னை முழுசாக மாற்றிக்கொண்டு ஒரு இந்து பெண்ணாகவே மாறினார். திருப்பதி போன்ற முக்கிய கோயில்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து வந்தார். இதையடுத்து சில கிறிஸ்தவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தும், என் சொந்த விசயத்தில் தலையிட மதவாதிகளுக்கு அனுமதியில்லை என்று காரசாரமாக அறிவித்து அவர்களின் வாயடைத்தார்.
ஆனால் அந்த அளவுக்கு பிரபுதேவா விசயத்தில் தீவிரமாக இருந்த நயன்தாரா, பிரபுதேவாவுடனான உறவு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து மீண்டும் தன்னை கிறிஸ்தவ மதத்திலேயே இணைத்துக்கொண்டார். இதற்காக அவர் கேரளாவில் உள்ள ஒரு சர்ச்சிக்கு சென்று சில மாதங்களுக்கு முன்பே பாவ மன்னிப்பு கோரியதாகவும கூறப்படுகிறது. மேலும், நேற்று கிறிஸ்மஸ் தினத்தையொட்டி வழக்கம்போல் தனது குடும்பத்தினருடன் இணைந்து துபாயில் கிறிஸ்துமஸ் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் நயன்தாரா.