ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகை நயன்தாரா பிறப்பால் ஒரு கிறிஸ்தவ பெண். அதனால் என்னதான் படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும் தேவாலயங்களுக்கு சென்று பிரேயர் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இருப்பினும் பிரபுதேவாவுடனான காதலுக்குப்பிறகு, அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக தன்னை முழுசாக மாற்றிக்கொண்டு ஒரு இந்து பெண்ணாகவே மாறினார். திருப்பதி போன்ற முக்கிய கோயில்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து வந்தார். இதையடுத்து சில கிறிஸ்தவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தும், என் சொந்த விசயத்தில் தலையிட மதவாதிகளுக்கு அனுமதியில்லை என்று காரசாரமாக அறிவித்து அவர்களின் வாயடைத்தார்.
ஆனால் அந்த அளவுக்கு பிரபுதேவா விசயத்தில் தீவிரமாக இருந்த நயன்தாரா, பிரபுதேவாவுடனான உறவு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து மீண்டும் தன்னை கிறிஸ்தவ மதத்திலேயே இணைத்துக்கொண்டார். இதற்காக அவர் கேரளாவில் உள்ள ஒரு சர்ச்சிக்கு சென்று சில மாதங்களுக்கு முன்பே பாவ மன்னிப்பு கோரியதாகவும கூறப்படுகிறது. மேலும், நேற்று கிறிஸ்மஸ் தினத்தையொட்டி வழக்கம்போல் தனது குடும்பத்தினருடன் இணைந்து துபாயில் கிறிஸ்துமஸ் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் நயன்தாரா.