தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இசையமைப்பாளர் இளையராஜா தற்போது சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கிறார். ஒரு பாடலின் சூழலை விளக்கி, அதற்கான மெட்டையும் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த மெட்டுக்குரிய பாடலை எழுதி அனுப்புமாறு அவர் ரசிகர்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தனது காதலியோ அல்லது காதலனையோ சந்திக்க செல்கிறார். அப்போது அங்கு நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நபர் நீண்ட நேரமாக வரவில்லை. அந்த சமயத்தில் உள்ள மனநிலையை கொண்டு பாடல் வரிகளை எழுத வேண்டும். பாடல் வரிகள் எந்த மொழியில் இருந்தாலும் பரவாயில்லை, என்று தெரிவித்துள்ளார்.