தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் |
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் மாநாடு. இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ள நிலையில் பட வெளியீட்டின் போது சில பிரச்னைகளும் நடந்தது. ஆனபோதிலும் அதையடுத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வை எட்டியுள்ளது. மாநாடு படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை படக்குழு கொண்டாடி வருகின்றனர். ரஜினி, சிவகார்த்திகேயன் என பல திரைநட்சத்திரங்களும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் மாநாடு படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார். அதில் மாநாடு படத்திற்கு நீங்கள் அனைவரும் கொடுத்து வரும் ஆதரவுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி . மாநாடு படம் பார்க்க தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் படத்தின் காட்சிகளை செல்போனில் படம் பிடித்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இது குற்றச்செயல், அனைவரும் இந்த படத்தை தியேட்டருக்கு வந்து பார்க்கட்டும் என தெரிவித்துள்ளார் வெங்கட் பிரபு.