'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
என் வளர்ச்சியை தடுப்பதற்காக சிலர் வதந்தியை பரப்பி விடுகிறார்கள் என்று நடிகை அசின் கூறியுள்ளார். நடிகை அசினுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக மும்பை பட உலகில் செய்திகள் பரவி வருகின்றன. தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாகவும், இருவீட்டு பெற்றோரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டது. இதையடுத்து கோபமடைந்த அசின், மும்பையில் நிருபர்களை அவசரமாக சந்தித்து பேட்டியளித்தார்.
அவர் கூறுகையில், எனக்கு திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது முட்டாள்தனமானது ஆகும். என் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருகிறார்கள். எனக்கு தற்போது 27 வயதுதான் ஆகிறது. இந்த சின்ன வயதில் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்று எனது வாழ்க்கையை நாசம் செய்ய நான் விரும்பவில்லை. சினிமாவில் நான் நிறைய சாதிக்க வேண்டி உள்ளது. விருதுகள் வாங்க வேண்டியது. சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெறவும் லட்சியம் உள்ளது. இவற்றில்தான் என் முழு கவனமும் இருக்கிறது. இந்த லட்சியங்கள் நிறைவேறிய பிறகுதான் திருமணம் பற்றி சிந்திப்பேன். இன்னும் ஏழு ஆண்டுகள் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். அதன் பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விடுவேன். சினிமா, குடும்பம் என்று இரண்டு இடத்திலும் கால் வைக்கமாட்டேன். திருமணம் ஆகிவிட்டால் சினிமாவை விட்டு விலகி விடுவேன், என்றார்.