மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
வழக்கமான, போலீஸ்-வில்லன் துரத்தல் கதை தான், இதுவும். ஆனாலும், "இதற்கு முன், எந்த படத்திலும், பார்க்காத அளவுக்கு, விறு விறுப்பான காட்சிகளும், பரபரப்பான திருப்பங்களும், இந்த படத்தில் இருக்கும் என, பயங்கரமான, "பில்டப் கொடுக்கின்றனர், படக் குழுவினர். மும்பையில், உள்ள டிஸ்கோ கிளப் உரிமையாளர்களின், சட்ட விரோத செயல்களை அம்பலப்படுத்த, ஒரு போலீஸ் அதிகாரி களம் இறங்குகிறார். அதில், படு பயங்கரமான பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வருகின்றன. இது தான், படத்தின் ஒன்லைன். சச்சின் ஜோஷி, கிகானா கான், ஆதித்ய பஞ்சோலி போன்ற, இந்தி பிரபலங்களுடன், நம்ம ஊர், பிரகாஷ் ராஜ், விமலா ராமன் ஆகியோரும், இந்த படத்தில் உள்ளனர். அங்குஷ் பட், படத்தை இயக்கியுள்ளார். அவர் கூறுகையில்,"நாட்டின், மற்ற நகரங்களிலிருந்து, மும்பை, சற்று வித்தியாசமானது. இங்கு வசிக்கும் ஒவ்வொருவரும், ஏதாவது ஒரு அபாயத்துக்குள் சிக்க வேண்டிய சூழல் உள்ளது. இந்த பின்னணியை பற்றித் தான், படத்தில் கூறியுள்ளோம் என்கிறார்.