இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
"பூ படத்தில், மாரி என்ற கேரக்டரில், கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்து காட்டி, தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர், பார்வதி. அதற்கு பிறகு, ஏனோ, இவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால், கன்னடம், மலையாள படங்களில் கவனம் செலுத்தினார். இப்போது, நான்காண்டு இடைவெளிக்கு பின், பரத்பாலா இயக்கும்,"மரியான் படத்தில் நடிக்கிறார். "ஏன், இந்த நீண்ட காத்திருப்பு என, அவரிடம் கேட்டபோது,"நடிப்பை வெளிப்படுத்தும், நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் நடிக்கலாம் என, காத்திருந்தேன். என், காத்திருப்பு வீண் போகவில்லை. "மரியான் படத்தில், என் நடிப்புத் திறனை வெளிப்படுத்தும், வாய்ப்பு கிடைத்ததால், உடனடியாக சம்மதம் தெரிவித்தேன். தனுஷ், பரத் பாலா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற மிகப் பிரபலமானவர்களுடன், நானும் இந்த படத்தில் இருக்கிறேன் என்பது, பெருமைக்குரிய விஷயம் தானே. இனிமேல், தமிழில், எனக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என, நம்புகிறேன்என, பெருமிதப்படுகிறார், பார்வதி.