வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
"பூ படத்தில், மாரி என்ற கேரக்டரில், கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்து காட்டி, தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர், பார்வதி. அதற்கு பிறகு, ஏனோ, இவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால், கன்னடம், மலையாள படங்களில் கவனம் செலுத்தினார். இப்போது, நான்காண்டு இடைவெளிக்கு பின், பரத்பாலா இயக்கும்,"மரியான் படத்தில் நடிக்கிறார். "ஏன், இந்த நீண்ட காத்திருப்பு என, அவரிடம் கேட்டபோது,"நடிப்பை வெளிப்படுத்தும், நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் நடிக்கலாம் என, காத்திருந்தேன். என், காத்திருப்பு வீண் போகவில்லை. "மரியான் படத்தில், என் நடிப்புத் திறனை வெளிப்படுத்தும், வாய்ப்பு கிடைத்ததால், உடனடியாக சம்மதம் தெரிவித்தேன். தனுஷ், பரத் பாலா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற மிகப் பிரபலமானவர்களுடன், நானும் இந்த படத்தில் இருக்கிறேன் என்பது, பெருமைக்குரிய விஷயம் தானே. இனிமேல், தமிழில், எனக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என, நம்புகிறேன்என, பெருமிதப்படுகிறார், பார்வதி.