Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

"காத்திருப்பு வீண் போகவில்லை - பார்வதி

I got good oppurtunity says parvathi menon"பூ படத்தில், மாரி என்ற கேரக்டரில், கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்து காட்டி, தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர், பார்வதி. அதற்கு பிறகு, ஏனோ, இவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால், கன்னடம், மலையாள படங்களில் கவனம் செலுத்தினார்.  இப்போது, நான்காண்டு இடைவெளிக்கு பின், பரத்பாலா இயக்கும்,"மரியான் படத்தில் நடிக்கிறார். "ஏன், இந்த நீண்ட காத்திருப்பு என, அவரிடம் கேட்டபோது,"நடிப்பை வெளிப்படுத்தும், நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் நடிக்கலாம் என, காத்திருந்தேன். என், காத்திருப்பு வீண் போகவில்லை.  "மரியான் படத்தில், என் நடிப்புத் திறனை வெளிப்படுத்தும், வாய்ப்பு கிடைத்ததால், உடனடியாக சம்மதம் தெரிவித்தேன். தனுஷ், பரத் பாலா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற மிகப் பிரபலமானவர்களுடன், நானும் இந்த படத்தில் இருக்கிறேன் என்பது, பெருமைக்குரிய விஷயம் தானே. இனிமேல், தமிழில், எனக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என, நம்புகிறேன்என, பெருமிதப்படுகிறார், பார்வதி.

Tags »
parvathi menon, பார்வதி மேனன்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in