பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
தமன்னாவுக்கு, சமீபகாலமாக, தமிழில் வாய்ப்பு இல்லை. இதனால், பாலிவுட் பக்கம் சென்று விட்டார். அவரை, மீண்டும் கோடம்பாக்கத்துக்கு அழைத்து வர, சில தயாரிப்பாளர்கள் முயற்சித்தனர். அவர்களுக்கு கால்ஷீட் கொடுக்க மறுத்து விட்டார், தமன்னா. ஆனால், கடும் முயற்சி மேற்கொண்டு, இயக்குனர் சிவா, தமன்னாவை, மறுபடியும் தமிழுக்கு அழைத்து வந்துள்ளார். அஜீத்தை ஹீரோவாக வைத்து, ஒரு புதிய படத்தை, அவர் இயக்குகிறார். இந்த படத்துக்கு தான், தமன்னாவை புக் செய்துள்ளனர். இந்த படத்தில் நடிப்பதற்காக, தமன்னாவுக்கு, 1.5 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாம். இது, வழக்கமாக, அவர் வாங்கும் தொகையை விட, மிக அதிகம். சம்பளத் தொகையை கூறியபின், எந்த மறுப்பும் கூறாமல், நடிக்க, ஓ.கே கூறி விட்டாராம். இதன்மூலம், தென் மாநில நடிகைகளில், அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில், தமன்னா பெயர் தான், முதலிடத்தில் உள்ளதாம்.