தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி |
தமன்னாவுக்கு, சமீபகாலமாக, தமிழில் வாய்ப்பு இல்லை. இதனால், பாலிவுட் பக்கம் சென்று விட்டார். அவரை, மீண்டும் கோடம்பாக்கத்துக்கு அழைத்து வர, சில தயாரிப்பாளர்கள் முயற்சித்தனர். அவர்களுக்கு கால்ஷீட் கொடுக்க மறுத்து விட்டார், தமன்னா. ஆனால், கடும் முயற்சி மேற்கொண்டு, இயக்குனர் சிவா, தமன்னாவை, மறுபடியும் தமிழுக்கு அழைத்து வந்துள்ளார். அஜீத்தை ஹீரோவாக வைத்து, ஒரு புதிய படத்தை, அவர் இயக்குகிறார். இந்த படத்துக்கு தான், தமன்னாவை புக் செய்துள்ளனர். இந்த படத்தில் நடிப்பதற்காக, தமன்னாவுக்கு, 1.5 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாம். இது, வழக்கமாக, அவர் வாங்கும் தொகையை விட, மிக அதிகம். சம்பளத் தொகையை கூறியபின், எந்த மறுப்பும் கூறாமல், நடிக்க, ஓ.கே கூறி விட்டாராம். இதன்மூலம், தென் மாநில நடிகைகளில், அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில், தமன்னா பெயர் தான், முதலிடத்தில் உள்ளதாம்.