பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமன்னாவுக்கு, சமீபகாலமாக, தமிழில் வாய்ப்பு இல்லை. இதனால், பாலிவுட் பக்கம் சென்று விட்டார். அவரை, மீண்டும் கோடம்பாக்கத்துக்கு அழைத்து வர, சில தயாரிப்பாளர்கள் முயற்சித்தனர். அவர்களுக்கு கால்ஷீட் கொடுக்க மறுத்து விட்டார், தமன்னா. ஆனால், கடும் முயற்சி மேற்கொண்டு, இயக்குனர் சிவா, தமன்னாவை, மறுபடியும் தமிழுக்கு அழைத்து வந்துள்ளார். அஜீத்தை ஹீரோவாக வைத்து, ஒரு புதிய படத்தை, அவர் இயக்குகிறார். இந்த படத்துக்கு தான், தமன்னாவை புக் செய்துள்ளனர். இந்த படத்தில் நடிப்பதற்காக, தமன்னாவுக்கு, 1.5 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாம். இது, வழக்கமாக, அவர் வாங்கும் தொகையை விட, மிக அதிகம். சம்பளத் தொகையை கூறியபின், எந்த மறுப்பும் கூறாமல், நடிக்க, ஓ.கே கூறி விட்டாராம். இதன்மூலம், தென் மாநில நடிகைகளில், அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில், தமன்னா பெயர் தான், முதலிடத்தில் உள்ளதாம்.