ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'ஒத்த செருப்பு' படத்திற்குப் பிறகு தமிழில் பார்த்திபன் இயக்கி வரும் படம் 'இரவின் நிழல்'. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இருவரும் இணையும் முதல் படம் இது. 20 வருடங்களுக்கு முன்பு இருவரும் இணைந்து பணி புரிவதாக அறிவிக்கப்பட்ட 'ஏலேலோ' படம் நடக்காமல் போய்விட்டது.
இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பார்த்திபன் பாடல் ஒன்றை எழுதியுள்ளார். அது குறித்து பார்த்திபன் டுவிட்டரில், “இரவின் நிழல்' - ஏ.ஆர்.ரஹ்மான் இசை ம்யூரல்! பின்னணி இசைக்காக அவர் குரலில் ஒரு ட்யூனை அனுப்பி என்னை எழுதச் சொன்னார். கேட்ட நொடி முதல் கிறங்கிக் கிடக்கிறேன் high-யில். இறங்கி வந்து அந்த abstract tune-க்கு வரி வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஒரு வாரம் மூழ்க, பதிவும் செய்யப்பட்டது.
சங்குக்குள் அடக்கப்பட்ட கங்கை போல், முழு படத்தின் வீரியத்தையும் ஒரு பாடலில்.சிலிர்த்து சிறகடித்து பறக்கிறேன் பரவசத்தில். ரசித்து சமைத்தால் தானே இலைக்கு(திரைக்கு)வரும்போது ருசிக்கும்,” எனப் பதிவிட்டுள்ளார்.
'ஒத்த செருப்பு' படம் போலவே ஒரு புதுமையான முயற்சியில் இந்த 'இரவின் நிழல்' படத்தைப் பார்த்திபன் எடுத்து வருவதாகத் தெரிகிறது.