பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
தாய்மை உணர்வை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கும் படம் தான் ஜான். இப்படம் எந்த நாட்டுக்கும், எந்த மொழிக்கும் பொருந்தும். எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர் என மூன்று முக்கிய பணிகளை ஏற்றிருக்கும் ரஸித் ஸெலிகேசர், பார்ப்பவர்கள் மனதில் நிற்கும் படத்தை அளித்ததற்கு பாராட்டுக்குரியவர். 300 எபிசோடுகளை கொண்ட 12 டி.வி., தொடர்களை இயக்கியுள்ள ரஸித், இயக்கியுள்ள இரண்டாவது திரைப்படம் இது. 2012ம் ஆண்டு ஸ்ன்டான்ஸ் திரைப்பட விழாவில் நடுவர் குழுவின் விசேஷ விருதை பெற்றுள்ளது இப்படம்.
கமல், ஆயிஷா தம்பதியினர் குடும்பத்தினரின் எதிர்ப்புகளில் இருந்து தப்பிக்க இஸ்தான்புல் நகருக்கு ஓடி வந்துவிடுகின்றனர். கமல், ஆயிஷே இருவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக இருந்தாலும் குழந்தை இல்லாதது அவர்களுக்கு பெரிய குறையாக இருக்கிறது. மருத்துவ பரிசோதனையில் கமலிடம் தான் குறை உள்ளது என்றும், அவரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்பது தெரிய வருகிறது. அவமானத்தில் வருத்தப்படும் கமல், ஒன்பது மாதங்கள் கழித்து ஒரு குழந்தையை தத்து எடுத்து கொள்ளலாம் என்று முடிவு செய்து தன் மனைவியிடம் அதுவரை கர்ப்பமாக இருப்பது போன்று நடிக்க சொல்கிறார். ஆயிஷாவுக்கு விருப்பம் இல்லை என்றாலும் தனது கணவரின் மானப்பிரச்னை என்பதால் ஒப்புக்கொள்கிறாள். அண்டை வீட்டுக்காரர்கள், உறவினர்கள் எல்லோரும் இவர்களை மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறார்கள். நிறைய கஷ்டத்தோடு தண்டனை போல கர்ப்பிணியாக நடிக்கிறாள் ஆயிஷா.
பணம் கொடுத்து குழந்தைக்கு ஏற்பாடு செய்கிறார் கமல். ஆனால் அந்த குழந்தையிடம், ஆயிஷாவுக்கு தாய்பாசம் வரவில்லை. இதனால் கணவன் - மனைவி இடையே விரிசல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் வெறுக்க ஆரம்பிக்கின்றனர். ஒருகட்டத்தில் இவர்களது திருமண பந்தமும் முறிகிறது. கமல் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடி ஒரு பணக்காரரின் மகளை திருமணம் செய்கிறார். ஆயிஷா ஒரு ரெஸ்டாரெண்டில் சமையல் பணிபுரிந்து தனக்கு பிறக்காத மகன் ஜானை வளர்க்கிறாள்.
வேண்டா வெறுப்பாக கணவருக்காக கர்ப்பிணி போல் நடிப்பது, கமல் தன்னை விட்டு பிரிந்து டெஸ்டாரண்ட்டில் கஷ்டப்படுவது, ரெஸ்டாரண்ட்டில் உடன் வேலை பார்க்கும் ஒருவர் ஆயிஷாவை விரும்புவது, பூங்காவில் விட்ட மகன் ஜான், அம்மா ஆயிஷாவை பின்தொடர்ந்து அவள் வேலை செய்யும் இடத்திற்கே வருவது, ஒருசமயம் கமல் காணாமல் போய் அவனை கண்டுபிடிப்பது, என படத்தில் பல கஷ்டங்கள் அனைத்தும் ஆயிஷாவின் மீதே திணிக்கப்பட்டுள்ளது. ஆயிஷாவாக நடித்து இருக்கும் அந்தை நடிகை மீது நம்மை அறியாமலேயே ஒருவித பரிதாபம் ஏற்படுகிறது. அவரைப்போலவே குழந்தையாக நடித்திருக்கும் ஜானும், ஆயிஷாவுக்கு சரிசமாக நடித்திருக்கிறார்.
நடிப்பு, கதை, இயக்கம் என்று பல துறைகளிலும் நல்ல வலுவான படம் ஜான்.
கோவாவிலிருந்து -எஸ்.ரஜத்-