சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் |
தெலுங்கு நடிகர் ராணாவுடனான காதல் கிசுகிசுக்களுக்குப்பிறகு த்ரிஷாவின் மார்க்கெட் கிடுகிடுவென இறங்கித்தான் உள்ளது. ஆனால் அவரோ, இப்போதும் தெலுங்கில் ராம்சரண்தேஜாவுடன் நடிப்பது போல், தமிழில் ஜெயம் ரவி, ஜீவா, விஷால் போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளேன். அதனால் என் மார்க்கெட் இறங்கி விட்டது என்ற பேச்சுக்கே இடமில்லை. இப்போதும் எப்போதும்போல்தான் பிசியாக நடித்து வருகிறேன். அதே மதிப்பு மரியாதை எனக்கு சினிமாவில் கிடைத்து வருகிறது என்கிறார்.
ஆனால் கைவசம் உள்ள படங்களுக்குப்பிறகு புதிய படம் சம்பந்தமாக ஒரு கம்பெனிகூட த்ரிஷாவை தொடர்பு கொள்ளவில்லையாம். நெருக்கமான இயக்குனர்களே த்ரிஷாவைக்கண்டால் வேறு பக்கமாக தலையை திருப்பிக்கொண்டு செல்கிறார்களாம். இதனால் தனது மார்க்கெட் வேகமாக இறங்கத் தொடங்கியுள்ளது என்பதை புரிந்து கொண்ட த்ரிஷா, இத்தனை நாளும் டபுள் ஹீரோயினி கதை என்றாலும் எனக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்று நெஞ்சை நிமிர்த்து பேசி வந்தவர், இப்போது தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் தயாராகும் ரம் என்ற படத்தில் மூன்று ஹீரோயினிகளில் ஒருவராக நடிக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதே படத்தில் நடிக்கும் பூர்ணா, அர்ச்சனாவை போன்றுதான் த்ரிஷாவுக்கு சரிசமமான வேடமாம். அது மட்டுமின்றி த்ரிஷாவின் படக்கூலியும் கடுமையாக இறங்கி விட்டதாம். என்றாலும் தனது மார்க்கெட் நிலைமையை புரிந்து கொண்டு அந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் த்ரிஷா. அதேசமயம், படத்தில் நானே முக்கிய வேடத்தில் நடிப்பதாக வெளியில் கேட்பவர்களிடம் சொல்லுங்கள் என்று சம்பந்தப்பட்ட கம்பெனியிடம் பர்சனலாக கேட்டுக்கொண்டுள்ளாராம் த்ரிஷா.