600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
தெலுங்கு நடிகர் ராணாவுடனான காதல் கிசுகிசுக்களுக்குப்பிறகு த்ரிஷாவின் மார்க்கெட் கிடுகிடுவென இறங்கித்தான் உள்ளது. ஆனால் அவரோ, இப்போதும் தெலுங்கில் ராம்சரண்தேஜாவுடன் நடிப்பது போல், தமிழில் ஜெயம் ரவி, ஜீவா, விஷால் போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளேன். அதனால் என் மார்க்கெட் இறங்கி விட்டது என்ற பேச்சுக்கே இடமில்லை. இப்போதும் எப்போதும்போல்தான் பிசியாக நடித்து வருகிறேன். அதே மதிப்பு மரியாதை எனக்கு சினிமாவில் கிடைத்து வருகிறது என்கிறார்.
ஆனால் கைவசம் உள்ள படங்களுக்குப்பிறகு புதிய படம் சம்பந்தமாக ஒரு கம்பெனிகூட த்ரிஷாவை தொடர்பு கொள்ளவில்லையாம். நெருக்கமான இயக்குனர்களே த்ரிஷாவைக்கண்டால் வேறு பக்கமாக தலையை திருப்பிக்கொண்டு செல்கிறார்களாம். இதனால் தனது மார்க்கெட் வேகமாக இறங்கத் தொடங்கியுள்ளது என்பதை புரிந்து கொண்ட த்ரிஷா, இத்தனை நாளும் டபுள் ஹீரோயினி கதை என்றாலும் எனக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்று நெஞ்சை நிமிர்த்து பேசி வந்தவர், இப்போது தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் தயாராகும் ரம் என்ற படத்தில் மூன்று ஹீரோயினிகளில் ஒருவராக நடிக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதே படத்தில் நடிக்கும் பூர்ணா, அர்ச்சனாவை போன்றுதான் த்ரிஷாவுக்கு சரிசமமான வேடமாம். அது மட்டுமின்றி த்ரிஷாவின் படக்கூலியும் கடுமையாக இறங்கி விட்டதாம். என்றாலும் தனது மார்க்கெட் நிலைமையை புரிந்து கொண்டு அந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் த்ரிஷா. அதேசமயம், படத்தில் நானே முக்கிய வேடத்தில் நடிப்பதாக வெளியில் கேட்பவர்களிடம் சொல்லுங்கள் என்று சம்பந்தப்பட்ட கம்பெனியிடம் பர்சனலாக கேட்டுக்கொண்டுள்ளாராம் த்ரிஷா.