சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? | நாளைய படங்களின் வெளியீட்டில் ஒரு அபூர்வம் |
கே.பாக்யராஜ் மகன் சாந்தனுவை நாயகனாக வைத்து இயக்கிய படம் சித்து ப்ளஸ்டூ. இப்படத்தில் நாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் சாந்தினி. பாக்யராஜினி மோதிரக்கையில் குட்டு பட்டிருக்கிறோம். அதனால் பெரிய ஹீரோயினியாகி விடுவோம் என்று கனவு கண்டார். ஆனால் அந்த படம் தோல்வி அடைந்ததால் அவரது கனவு நனவாகவில்லை. அதற்கடுத்தபடியாக அவர் நடித்த படித்துறை படம் இன்று வரை வெளியாகவில்லை. அதனால் ராசியில்லாத நடிகை என்ற முத்திரை குத்தியது கோடம்பாக்கம்.
இருப்பினும் வீட்டில் இருந்தபடியே இயக்குனர்களிடம் சான்ஸ் கேட்டு விடாமுயற்சி செய்து வந்தார் சாந்தினி. அதன்பலனாக நகுல் நடித்துள்ள நான் ராஜாவாகப்போகிறேன் படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பை கைப்பற்றினார். இந்த படத்தில் கல்லூரி மாணவியான அவரை ஒரு பெரிய பிரச்சினையில் இருந்து நகுல் காப்பாற்றுவது போன்ற கதையாம். அதனால் இருவரும் ரவுடிகளின் கண்ணில் மண்ணை தூவி விட்டு ஓடிக்கொண்டேயிருப்பார்களாம். ஆனால் அப்படி செல்லும்போது, பல இடஙகளில் தன்னை பற்றிக்கொண்டு ஓடி வரும் சாந்தினியை, எதிரிகளிடமிருந்து காப்பாற்ற அவரை தனது தோளில் தூக்கி எதிரிகளை பந்தாடியபடி சண்டை செய்வாராம் நகுல். அதனால் படப்பிடிப்பு முடிந்து ஒரு வாரம் வரை என் உடம்பு வலி தீரவில்லை என்கிறார் சாந்தினி.