வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ஒற்றன் படத்தில் "சின்ன வீடா வரட்டுமா... பெரிய வீடா வரட்டுமா" என்ற பாடலில் கட்டிடத் தொழிலாளர்களின் காமத்தை சொன்ன இளங்கண்ணன் இப்போது அதே கட்டிடத் தொழிலாளர்களின் கஷ்டத்தை சொல்ல ஒரு படம் இயக்கி வருகிறார். படத்தின் பெயர் "அடித்தளம்". அங்காடித்தெரு மகேஷ்தான் ஹீரோ. ஆருஷி ஹீரோயின். "இந்த உலகத்துலேயே அதிக உடல் உழைப்பை கொடுப்பவன் கட்டிடத் தொழிலாளிதான். ஒரு வீட்டின் ஒவ்வொரு செங்கலையும் பார்த்து பார்த்து கட்டியவன். அதை வேறொருவரிடம் ஒப்படைத்து விட்டு கண்ணீரோடு செல்லும் அந்த வலியை ஆண்டு தோறும் சந்திக்கிறான். கட்டிடத் தொழிலாளர்களைச் -சுரண்டி ஒரு கூட்டமே வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதை அப்படியே பதிவு செய்கிறேன்" என்கிறார் இளங்கண்ணன்.
கட்டுறது சின்ன வீடுங்களா... பெரிய வீடுங்களா...!!