'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
எந்த மொழியானாலும் அதில் ஒரு படம் வெளியாகி வெற்றி பெற்றால் அதன் இரண்டாம் பாகம் எடுப்பது குறித்த பேச்சு உடனே கிளம்பி விடும். குறிப்பாக கேங்ஸ்டார் பாணி படங்கள் தான் இந்தப்பேச்சில் அதிகம் அடிபடுகின்றன. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் லூசிபர் படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானபோது, அதன் இரண்டாம் பாகம் எம்புரான் என்கிற பெயரில் உருவாக இருக்கிறது என அதன் இயக்குனர் பிரித்விராஜ் அறிவித்தார். அதற்கான வேலைகளையும் துவங்கியபோதுதான் கொரோனாவின் அடுத்தடுத்த இரண்டு அலைகள் அதை தற்காலிகமாக தடுத்தி நிறுத்தி வைத்துள்ளன.
தற்போது அதேபோல கடந்த சில தினங்களுக்கு முன் துல்கர் சல்மான் நடிப்பில் குருப் என்கிற படம் பான் இந்தியா ரிலீஸாக வெளியானது. ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இந்தப்படம் ரூ.5௦ கோடி வசூலையும் தாண்டி விட்டது. இதை தொடர்ந்து இந்தப்படத்தின் இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் சோஷியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடியபோது, இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பீர்களா என ரசிகர்கள் கேட்டனர். அதற்கு, “நிச்சயமாக.. அதற்கான வேலையை விரைவில் ஆரம்பிக்க போகிறேன்” என கூறியுள்ளார் ஸ்ரீநாத் ராஜேந்திரன்.