'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் மங்காத்தா, சென்னை 28-2, ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மஹத் ராகவேந்திரா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தற்போது ஹீரோவாகவும் பயணித்து வருகிறார். இந்நிலையில் பாலிவுட்டில் கால்பதிக்கிறார். ஹிந்தியில் சத்ரம் ரமணி இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் நடிகர் ஜாஹிர் இக்பாலுடன் இணைந்து இன்னொரு நாயகனாக நடிக்கிறார். சோனாக்ஷி சின்ஹா, ஹூயுமா குரேஷி ஆகியோரும் நடிக்கின்றனர். லண்டனில் 30 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
ஹிந்தியில் நடிப்பது பற்றி மஹத் கூறுகையில், ‛‛பாலிவுட் படத்தயாரிப்பில் உள்ள நண்பர் சுதீஷ் சென், என்னை பாலிவுட்டில் நடிக்க முயற்சி செய்ய சொன்னார். இப்பட ஆடிசனில் பங்கேற்று தேர்வானேன். சோனாக்ஷி சின்ஹா, ஹூயுமா குரேஷி போன்ற பிரபலமான பாலிவுட் நட்சத்திரங்கள் உடன் நடிக்க முதலில் தயக்கம் இருந்தது. ஆனால் இருவரும் என்னிடம் இயல்பாக பழகியதோடு படத்தில் சிறப்பாக நடிக்க நம்பிக்கை தந்தனர். இன்னொரு சக நடிகரான ஜாஹிரை சகோதரராக உணர்ந்தேன். அந்தளவுக்கு படப்பிடிப்பில் எனக்கு உறுதுணையாக இருந்தார். பாலிவுட்டில் நடிப்பது நல்ல அனுபவமாக இருந்தது. ஹிந்தி பேச மனைவி பிராச்சி உதவினார். பெண்களுக்காக ஒரு செய்தியை அழுத்தமாக கூறும் படம் இருக்கும். நான் நினைத்தே பார்த்திராத ஒரு கனவு குழுவுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். இந்த அற்புதமான அனுபவத்திற்காக கடவுளுக்கு நன்றி. லண்டனில் படப்பிடிப்பு முடிந்து தற்போது டில்லியில் படப்பிடிப்பு நடக்கிறது'' என்றார்.