கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
நாக சைதன்யாவை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்ததை அடுத்து மீண்டும் சினிமாவில் ஜெட் வேகத்தில் தனது பயணத்தை தொடங்கி இருக்கிறார் சமந்தா. அதன் காரணமாக தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தி சினிமாவிலும் கால்பதிக்க தயாராகிவிட்டார். அதோடு தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் ஐந்து மொழிகளில் இரண்டு பாகங்களாக தயாராகி வரும் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடவும் சம்மதம் தெரிவிக்கிறார் சமந்தா.
ரூ 250 கோடி பட்ஜெட்டில் செம்மர கடத்தலை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வைக்க சில பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த படக்குழு இப்போது சமந்தாவிடம் அது குறித்து பேசி இருப்பதோடு அந்த பாடல் நடனம் ஆட அவருக்கு ஒன்றரை கோடி சம்பளம் பேசியதாக கோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது.
ஆரம்பத்தில் சிங்கிள் பாடலுக்கு நடனமாட தயங்கிய சமந்தா, இயக்குனர் சுகுமார் தனக்கு நெருக்கமான நண்பர் என்பதால் பேச்சுவார்த்தைக்கு பிறகு ஒரு பாடலுக்கு நடனம் ஆட சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.