Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

நடிகை ரோஹினியின் நள்ளிரவு போராட்டம்!

Actress Rohini also sound for Delhi gang rape caseகற்பழிப்பு குற்றங்களுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் நடிகை ரோகினி தலைமையில் கல்லூரி மாணவிகள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமீபத்தில் டில்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். நாடுமுழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல் தூத்துக்குடியில் பள்ளி மாணவி சில தினங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். நாடுமுழுவதும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக மாணவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னையில் நள்ளிரவு 12 மணிக்கு நடிகை ரோகிணி தலைமையில் மெரினாவில் திரண்ட கல்லூரி மாணவ- மாணவிகள், கற்பழிப்பு சம்பவங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இவர்களில் ஒரு பகுதியினர் சத்யம் தியேட்டர் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு காந்தி சிலையை வந்தடைந்தனர். மசோதாவை நிறைவேற்றுங்கள் இந்த போராட்டம் குறித்து பேசிய நடிகை ரோகினி, கழுத்து நிறைய நகைகளை அணிந்து ஒரு பெண் நள்ளிரவு 12 மணிக்கு தன்னந்தனியாக பயமின்றி என்றைக்கு நடந்து செல்கிறாரோ அன்றுதான் நமது நாட்டுக்கு முழு சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். இதற்காகத்தான் நள்ளிரவு 12 மணிக்கு போராட்டம் நடத்தினோம் என்றார். பாலியல் வன்முறை சம்பவங்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பள்ளிகளில் பாலியல் கல்வியை கற்றுத்தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர்.

Tags »
Actress Rohini, நடிகை ரோகினி,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (4)

கிராபிக் கோபால் - saali kiraamam ,இந்தியா
2012-12-25 06:00:30 Report Abuse
 கிராபிக் கோபால் நல்ல முயற்சி. ஒவ்வொரு நடிகையும் இப்படி கால்ஷீட் இல்லாத நாட்களில் இப்படி நள்ளிரவு போராட்டம் நடாத்தினால் நாடு சுபீட்சம் பெறும். குற்றங்கள் அகன்று விடும். பெண் விடுதலை பெற்று விடுவோம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
kpmuniyasamy - tuticorin,இந்தியா
2012-12-25 05:59:35 Report Abuse
 kpmuniyasamy காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
jay - Nagercoil,இந்தியா
2012-12-25 04:46:56 Report Abuse
 jay எ Every case must be taken in an individuial basis.Otherwise men and women blame each other.Women set up a drama or man set up a drama just to take revenge each other.Human being are just a commonsense animal.Sometimes he or she acts worse than an animal.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
riyaz - tirupattur,இந்தியா
2012-12-24 17:29:34 Report Abuse
 riyaz good
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in