தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி |
அமலாபால் விஜய்யுடன் ஜோடி சேர்ந்திருப்பதை அடுத்து இரண்டாம் தட்டு நடிகைகளுக்குகூட விஜய்யுடன் நாமும் டூயட் பாடிவிடலாம் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதில் முதல் இடத்தை பிடிப்பவர் பிந்து மாதவிதான். நான் தெலுங்கு படங்களில் நடித்து வந்தபோதே விஜய்யின் தீவிர ரசிகை. அதனால் தமிழுக்கு நடிக்க வந்ததில் இருந்தே அவருடன் எப்படியும் டூயட் பாடி விட வேண்டும் என்ற ஆசை என் மனதில் அலைமோதிக்கொண்டே இருக்கிறது. சட்டம் ஒரு இருட்டறை படத்தை அவரது உறவினர் சினேகா பிரிட்டோ இயக்குகிறார் என்றதும் சம்பளத்தைப்பற்றிகூட பேசாமல் உடனே நான் கமிட்டானதற்கு அதுவும் ஒரு காரணம்.
மேலும், அப்படி அந்த படத்தில் நடித்தபோது, ஒரு நாள் ஸ்பாட்டுக்கு வந்த விஜய், எனது நடனத்தைப்பார்த்து ரொம்பவே ரசித்தார். அதோடு, பிரமாதமாக ஆடினாய் என்றும் கைகுலுக்கினார். அதனால் ஓரளவு விஜய்யை நான் நெருங்கி விட்டதாகவே கருதுகிறேன் என்று சொல்லும் பிந்துமாதவி, இப்போது தமிழில் பிசியாக நடித்து வரும் நான், விரைவில் தமிழில் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடித்து விஜய் நடிக்கும் எதிர்கால படங்களில் அவருடன் ஜோடி சேராமல் ஆந்திராவுககு திரும்ப மாட்டேன் என்றும் மனஉறுதியுடன் பேசுகிறார்.