துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடித்துள்ள சமந்தா, படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை என்றாலும், மனதளவில் நிறைவாக இருக்கிறார். காரணம், ஒவ்வொரு கலைஞர்களுக்குமே தான் சிறுவயதில் அதிகமாக பாதிக்கப்பட்ட வேடங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும்,. அப்படி எனக்கும் இருந்தது. நான் பள்ளிக்கூடத்தில் படித்த காலங்களில் சிலர் என்னை லவ் அப்ரோச் செய்தனர். அதில் ஒருவர் எனக்கு பிடித்து விட, சிலகாலம் நானும் அந்த என்ற மாயையில் விழுந்திருந்தேன்.
ஆனால் நாளடைவில் மாயமாய் வந்த காதலும் மாயமாய் போய் விட்டது. ஆனாலும், இப்போது என் மனம் அதை நினைத்து அசைபோட்டுப்பார்ப்பதுண்டு. விவரமில்லாத வயதில் வந்த காதல் என்றாலும், காதல் விவகாரமானது என்பதால் அதில் அவ்வப்போது மனம் தித்திப்பதுண்டு. அதனால்தான் நீதானே என் பொன்வசந்தம் படத்திலும் அதேபோன்ற வேடம் என்றதும் அதிக ஈடுபாட்டுடன் நடித்தேன் என்கிறார் சமந்தா. அந்தவகையில் கெளதம்மேனன்தான் தமிழில் என்னை புரிந்து கொண்டு சரியான வேடத்தில் யூஸ் பண்ணியிருக்கிறார். அடுத்தபடியாக தெலுங்கு இயக்குனர்கள்தான் என்னை படத்துக்குப்படம் சரியான வேடங்களில் யூஸ் பண்ணி வருகிறார்கள். அதனால்தான் தமிழைவிட எப்போதுமே நான் தெலுங்கு சினிமா மீதே அதிக ஈடுபாடாக இருந்து வருகிறேன் என்கிறார் சமந்தா.